Sunday, February 20, 2011

இஸ்லாமியர்கள் வணங்கும் சிவலிங்கம்


   
னது நண்பர் ஒருவர் மிகவும் வருத்தத்துடன் காணப்பட்டார் காரணம் என்னவென்று அவரிடம் கேட்டேன்

யாரோ ஒரு அதிகப்பிரசங்கி இவரிடம் இந்துக்கள் அனைவரும் முட்டாள் தனமாக கல்லை வணங்குவதாக சொன்னாராம்  அதற்காக இவர் கலங்குகிறாராம்
எனக்கு இவர்கள் இருவரையும் நினைத்து சிரிப்புத்தான் வந்தது எந்த மதத்தில் உருவ வழிபாடு இல்லை?

முதலில் இந்து மதத்தில் மட்டும் தான் சிலைவழிபாடு உண்டு என்ற கருத்து ஏற்று கொள்ள முடியாதது ஆகும்.

உலகத்திலேயே உருவ வழிபாட்டின் ஒரு சிறிய சாயல் கூட இல்லாத மதம் சொராஸ்ரிய மதமேயாகும்.

ஆனால் அந்த மதம் இன்று உலகத்தில் உயிரோடு இல்லை. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அது செத்து விட்டது.

சொராஸ்திரியத்திலிருந்து தோன்றிய ஹீபுரூ மதமோ, ஹீபுரூ மதத்திருந்து தோன்றிய கிறிஸ்துவ மதமோ, கிறுஸ்துவ மதத்திலிருந்து தோன்றிய இஸ்லாமிய மதமோ உருவ வழிபாட்டின் சாயல்களை கொண்டிருக்கவில்லை என்று சொல்வது சுத்தமான பொய்யாகும்.

கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் மாதா சிலைகளையும், அந்தோனியார் சொருபங்களையும் மனித சதையிலிருந்து உருவாக்கவில்லை. கல்லாலேயே செய்திருக்கிறார்கள்.

மெக்காவிலுள்ள காபாவில் சிவலிங்க வடிவ கல் இருப்பதை பார்த்த முஸ்லிம்கள் ஒத்துகொள்வார்கள்.

மேலும் அவர்கள் மேற்கு நோக்கி தொழுகை நடத்துவது வெறும் திசை தான் என்றாலும் அந்த திசை கூட ஒரு உருவ குறியிடேயாகும்.

மேலும் இஸ்லாமியர்கள் அல்லாவை மனதிற்குள் ஒரு ஆண் வடிவமாகவே பார்க்கிறார்கள்.

கூர்-ஆன் கூட அல்லா பேசினார், சிரித்தார் என்று சொல்கிறது.

உருவமில்லாத ஒன்று பேசுவதும், சிரிப்பதும் எப்படி?

எனவே உருவ வழிபாட்டை முஸ்லிம்கள் அல்லது கூர்-ஆன் மூர்க்கமாக எதிர்ப்பதில் ஆழ்ந்த அர்த்தமில்லை என்பது அம்மத கருத்துக்களை ஊன்றி படித்தால் புரிந்து கொள்ளலாம். 

கிறிஸ்துவ மதத்தில் சிலை வழிபாட்டுக்கு எதிர்ப்புகள் வந்தது மிகவும் பிற்காலத்தில் தான்.

ரோம் நகர தேவாலயங்களில் உள்ள சிலைகளின் பழமையான வயதே இதற்கு சரியான ஆதாரமாகும்.

மேலும் கடவுளை உருவமற்றவனாக எங்கும் நிறைந்தவனாக காண்பது எல்லாம் சாதாரண மனிதர்களால் முடியவே முடியாத விஷயமாகும்.

பக்தியில் பக்குவம் அடையும் போது தான் உருவமற்ற பரம் பொருளின் தன்மையை உணர முடியும்.

ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் தனக்கு பிடித்தமான ஒரு உருவத்தை பற்றிக் கொண்டால் தான் ஆன்மீகத்தின் எல்லையை கடந்து கடவுளை தொட முடியும்.

இதை உணர்ந்த நமது முன்னோர்கள் கலை வடிவான சிற்பங்களை வடித்து நம்மை வழிபட சொன்னார்கள்.

அடுத்தது கல்சிலையை வணங்குவது எப்படி கடவுளை வணங்குவதாகும் என்பது தான் கேள்வி.

இயற்கை பொருள் எல்லாவற்றிலும் கடவுள் இருக்கிறார். சில பொருட்களில் மட்டும் கடவுள் தன்மை அதிகமாக வெளிப்படுகிறது.

அப்படிப்பட்ட பொருட்களில் செம்பு, கல், மரம், வெள்ளி, தங்கம் போன்றவை முக்கியமானதாகும்.

இந்த பொருட்களில் நாத அலைகள் உள் பாய்ந்து வெளியில் வரும். கல் மந்திர ஒலிகளால் சுலபமாக நிரப்பபடுவதனால் கல் சிலையை வணங்குவது கடவுளை வணங்குவதே ஆகும்

தூணிலும் துரும்பிலும் இருக்கும் கடவுள் சிலையில் இருக்க மாட்டாரா என்ன?

உருவம் இல்லாத அருவப் பரம்பொருள் உருவமாகவும் வருவதினால்தான் கடவுளை சகுண நிற்குண ப்ரம்மம் என்று வேதங்களும் பகவத்கீதையும் சொல்லுகின்றன

4 comments:

K.Varadarajan said...

Excellent. this posting is really first class. human beings, particularly hindus started worshipping the almighty with a roopam to their ishta deivam. it's because for human beings it's easy to pray wiith a roopam just like himself having a body. in course of time if he gets into self realisation stage then he needs no roopam to worship because he has the ishta deivam iin his heart. your posting is good.

visaligopalan said...

very nice artcle

Unknown said...

my dear brother that is not lingam. allso no one praying that. you have to know what is inside that glass cover. foot print of ibraheem. in bible name abraham. when he bult khaba he stand on that stone everyday. same stone still now they keep. with scinetifik mathed cover metalwith glass. so please u have to see full viwe of holy makkah. then u will understand about that. our god telling us how to pray for him so we have to pray same way he like. so please read quran.or your vedam maybe after that u know about praying metherd. god he take seven days make this whole world. ther is seven sky top of us. he is staying over ther the place name of arsh. so noneed stone or metal for him. we have to bleave what the holy god is saying via quran.

Unknown said...

sahothararhaley, silai vanakkam.istadeiva vanakkam,entha vetham solluhirathu vasana aatharathudan tamil mozlyakkathudan thayavu seithu vilakka mudiuma ungal ovvoru pirasurathium padikkirom vilakkam kidaikkavillai neengalum muyarchi seiyungal therinthu kolhirom nandry hondu kolhaikalai therinthu kolla vasathiya irukkum nandriy